Friday, November 6, 2009

நீ நிலவில் இருந்து வரும்போது,
பஞ்சுப் பொதி மேகங்கள் நெய்த,
மாலைசூரியன் நிறத்தினைக் கொண்ட,
புடவை ஒன்றை பாசத்துடன் பரித்துவா!
காலையில் பள்ளி மைதானத்தில் ,
குதித்து விளையாடும் குருவிகள்,
முதல்நாள் மழை நீரில்,
குளித்து சிலிர்க்கும் காக்கைகள்,
வகுபிற்கிடை, தட்டியில் ஓட்டையிட்டு ,
மாற்றிக்கொள்ளும் பேனா, பென்சில்கள்,
கலர்கலராய் குச்சி ஐஸ் ,
பள்ளித் தோட்டத்து பச்சைமாங்காய்,
மழைகாலத்தில் சாலைக்கு இணையாக,
வகுப்பறையில் கணுக்கால் மழைநீர்,
கால்கள் மழைநீரை அளைய,
கண்கள் பேய் மழையை வேடிக்கைபார்க்க,
காதுகள் எதோகொஞ்சம் ப்பாடம்கேட்கும்,
மாலையில் மழைநீரில், பல்லவன் பேருந்து
உண்டாக்கும் அலைக்கு ஒதுங்கி,
மழைநீரில் கப்பல் விட்டபடி
வீட்டுக்கு பயணம்.