Tuesday, November 10, 2009

எத்தனை உன்னதமான உயிரை, தகுதியற்ற
ஒருத்தனுக்காக இழக்க இருந்தேன் ,
நெற்றியில் இடும் திருநீற்றில்,
கத்தி வைத்திருக்கிறாய்,
மந்திரம் சொல்லும் வாயாலே,
பொய் உரைக்கிறாய்,
கழகு கூட இறந்த பிணத்தை தான் தின்னும்,
நீயோ கசாப்புக் காரனை போல்,
உயிருடான் அறுக்கிறாய்.
ஒன்று போனால் தான் ஒன்று வாழும்.
மனைவியடனான் அந்தரங்கத்தைப் பதிவு செய்து,
விற்கும் மனிதர்கள் இருக்கும் போது,
என் உணர்வுகளை பதிவு செய்து அரங்கேற்றிய,
உனது செயல் அந்த அளவிற்கு பாவமில்லை.
நல்லகாலம் விழித்துக் கொண்டேன்,
உணர்வை பதிவு செய்த உனக்கு,
அந்தரங்கத்தைப் பதிவு செய்வது பாவச் செயலில்லை.
வாழ்க்கை வெறும் வெங்காயம் தான்,
அதனால் தான் எல்லா அத்தியாயங்களும்,
கண்ணிரால் எழுதப் பட்டுள்ளன்.
வெங்காயத்தை தண்ணீரில் போட்டால்
கண் ஏறியதாம், அதனால்தான்,
அத்தனைக் கூட்டமோ அந்த கடைகளில் ?
ரோஜாவில் முள் இருக்காது,
ரோஜா செடியில் தான் முள் இருக்கும்,
என் வீட்டு ரோஜா செடியில்,
இலைகளுமில்லை,பூக்களுமில்லை,
வெறும் முட்கள் மட்டும் தான்.
பசுந் தோல் போர்த்திய புலிகள்,
புலித் தோல் போர்த்திய பசுக்கள்,
பட்டைப் போட்ட நரிகள்,
நாமம் போட்ட கரடிகள்,
மிருக நாற்றமடிக்கும் வீடுகள்,
சம்சாரியாக வாழும் சந்நியாசி ,
சந்யாசியாக வாழும் சம்சாரி,
திரும்பிய பக்கமெல்லாம்,
சிங்கங்கச்ளும், சிறுத்தைகளும்,
சர்வ சுதந்திரமாய் உலவ,
மான்களும்,மயில்களும்,

Monday, November 9, 2009

உன் நினைவுகளை வெட்டி வீசி எறிந்தாலும்
பாசம் வேருன்றி விட்டதால், என் இதயம்
உன்னை மறக்க மறுக்கின்றது.
ஏனோ,எனக்கு நினைவு குறைகிறது,
நீ என் ரத்தத்தை குடித்து அல்லவா ,
என்னுள் அரசு, ஆல், போல் வேருன்றி விட்டாய்.

Friday, November 6, 2009

நீ நிலவில் இருந்து வரும்போது,
பஞ்சுப் பொதி மேகங்கள் நெய்த,
மாலைசூரியன் நிறத்தினைக் கொண்ட,
புடவை ஒன்றை பாசத்துடன் பரித்துவா!