காதல் இதயம் , என்றென்னி சாத்தானிடம்
மாட்டிக்கொண்டேன். என்னை விடுவிக்க நான்
முயன்றும்,அது என்னை விடுவதாய் இல்லை.
இன்று, சாத்தானை உணர்ந்த நான், என்னை,
உணரமுடியாத அதனுடன் .
என் கனவு எனக்குப் பிடிக்கும்,
கனவில் வரும் உன்னைப் பிடிக்கும்,
கனவில் நம் இல்லறம் பிடிக்கும்,
உன்னைத் துயில் எழுப்பித் தூங்கச் செய்யும், என்
என் கடமைகளும், உன் "கடமைகளும் ",
அங்குதான் முழுமை அடைகின்றன,
மாலையில் நீ கொண்டுவரும் பத்துமுழ
மல்லிகையும், காலைக்குள் பந்தாடப் பட்டுவிடும்.
கண்கள் நிறைய கனவுகள், கைகள் நிறைய
வளையல்கள், இதயத்தில் "ஒருவனாய்" சுமந்த உன்னை,
சிறிது இடம் மாற்றி, " இருவராய்" சுமக்க ஆசை.
நம் மகளுடன் சேர்த்து உனக்கும் " பசிஆற்றிட" வேண்டும்.
என் கனவு எனக்குப் பிடிக்கும்.
அமைதியற்ற மனதிற்கு, அமைதி வேண்டும்,
தூக்கமிழந்த கண்களுக்கு , தூக்கம் வேண்டும்,
இதயமிழந்த எனக்கு, இதயம் வேண்டும்.
இனி, நம்பிக்கை மீது நம்பிக்கையில்லை,
அமைதியான இதயத்திற்குத் தேவையான,
தூக்கத்தை நானே தேடிக் கொண்டேன்.
கடவுளே, உன்னிடம் ஒரு வரம்
"உண்மைக் காதலை மட்டும்
உலகில் இருந்து எடுத்துவிடு ".
உண்மையானவர்களும் சாதிக்கப் பிறந்தவர்கள்.
அவர்களும், உலகில் வாழட்டும்.