Thursday, November 5, 2009

காதல் இதயம் , என்றென்னி சாத்தானிடம்

மாட்டிக்கொண்டேன். என்னை விடுவிக்க நான்

முயன்றும்,அது என்னை விடுவதாய் இல்லை.

இன்று, சாத்தானை உணர்ந்த நான், என்னை,

உணரமுடியாத அதனுடன் .

என் கனவு எனக்குப் பிடிக்கும்,

கனவில் வரும் உன்னைப் பிடிக்கும்,

கனவில் நம் இல்லறம் பிடிக்கும்,

உன்னைத் துயில் எழுப்பித் தூங்கச் செய்யும், என்

என் கடமைகளும், உன் "கடமைகளும் ",

அங்குதான் முழுமை அடைகின்றன,

மாலையில் நீ கொண்டுவரும் பத்துமுழ

மல்லிகையும், காலைக்குள் பந்தாடப் பட்டுவிடும்.

கண்கள் நிறைய கனவுகள், கைகள் நிறைய

வளையல்கள், இதயத்தில் "ஒருவனாய்" சுமந்த உன்னை,

சிறிது இடம் மாற்றி, " இருவராய்" சுமக்க ஆசை.

நம் மகளுடன் சேர்த்து உனக்கும் " பசிஆற்றிட" வேண்டும்.

என் கனவு எனக்குப் பிடிக்கும்.

அழகிய பௌர்ணமி நாளன்று,

மாலையும், இரவும், சந்திக்கும் வேளையில்,

உன்னுடன் தோள் சேர்ந்து, நிலவை ரசிக்க ஆசை,

ஆழ்நீலக் கடலின் கரையில் நின்று,

நம் காதலின் ஆழத்தை அளந்துவிட ஆசை.

வாழும் வரையில் நான் கேட்டும்,
ஒற்றை ரோஜா தராத நீ,
இன்று ஏன் பூமாலையோடு ?
உனக்குத் தெரியாதா?
நீ கொடுக்கும் பூவைத் தான்,
சூடுவது என்ற முடிவில்
இத்தனை ஆண்டுகளாய்
வாழ்ந்தேன் என்று ?
சரி, நம் இருவரின் ஆசையும்
நிறைவேறட்டும்.
அந்த மாலையில் இருந்து,
ஒற்றை ரோஜாவை தந்துவிட்டு போ !
கடவுளே, உன்னிடம் ஒரு வரம்
"உண்மைக் காதலை மட்டும்
உலகில் இருந்து எடுத்துவிடு ".
உண்மையானவர்களும்
சாதிக்கப் பிறந்தவர்கள்.
அவர்களும், உலகில் வாழட்டும்.

அமைதியற்ற மனதிற்கு, அமைதி வேண்டும்,

தூக்கமிழந்த கண்களுக்கு , தூக்கம் வேண்டும்,

இதயமிழந்த எனக்கு, இதயம் வேண்டும்.

இனி, நம்பிக்கை மீது நம்பிக்கையில்லை,

அமைதியான இதயத்திற்குத் தேவையான,

தூக்கத்தை நானே தேடிக் கொண்டேன்.

கடவுளே, உன்னிடம் ஒரு வரம்

"உண்மைக் காதலை மட்டும்

உலகில் இருந்து எடுத்துவிடு ".

உண்மையானவர்களும் சாதிக்கப் பிறந்தவர்கள்.

அவர்களும், உலகில் வாழட்டும்.

என்னுடைய நோய்க்கு உன்னிடம் ,
மருந்திருந்தும், தர மறுக்கிறாய் ,
நோய்க்கு " உணவிடாமல் " அதையே
மருந்தக்கினால், நோயும் மரித்துவிடும் .
என்னுடைய நோய்க்கு உன்னிடம் ,
மருந்திருந்தும் தர மறுக்கிறாய் ,
நோய்க்கு உணவிடமல், அதையே
மருந்தக்கினால் , நோயும் மரித்துவிடும் .
இமை மூடும் மெல்லிசையில், உதட்டோரப் புன்னகையில்,
மென்மையாய் வருடிச் செல்லும் உன் நினைவுகள்,
" என் நிழலையே காணாத நிஜமாய் நான் ",
உன் நினைவுகளின் உயிர் குடித்தபடி வாழ்கிறேன் .