Tuesday, November 3, 2009

மரணத்திற்கு பின்னாலும் , மனிதனால்
உயிர் வாழ முடியுமா ? முடியும் ,
உன்னை பிரிந்து இன்னும்
"நான் வாழ்கிறேன் ".
உடல் பிரிந்த சிறகாய், என் நினைவுகள் ,
உன்னை தேடி அலைகிறது வானில் ,
உன் முகவரி தெரிந்தும் முகம்
பார்க்க முடியாமல் நான் .
"குற்றமே " செய்யாத ஒருத்தனை ,
" குற்றவாளி " ஆக்கிய எனக்கு ,
என்ன தண்டனை ?
அந்த "நல்லவன் "
என்னை "மன்னிப்பது "
மட்டும் தான் .
என் வாழ்க்கையை புரட்டிப் போட்டு பார்த்த ,
நீ பேசுகிறாய் , 'பார்க்க என்ன இருக்கிறது ,
பேச என்ன இருக்கிறது ".

என் இதயம் உன்னை தேடிய போது ,
உன் இதயம் தாளிடப்பட்டு விட்டது ,
காற்றாய் நான் வந்த போது ,
உன் வீட்டு கதவு சாத்தப்பட்டு இருந்தது ,
சாரலாய் நான் தெறித்த போது ,
உன் ஜன்னல் மூடிக் கொண்டது ,
தற்சமயம் உன் வீட்டு கிணற்றில்
"நிலவாய்" நான் .
"பால பாடத்தில் " இருந்து "பள்ளி பாடத்திற்கு "
இப்போது என்றால் "பால பாடம் " எப்போது + .....
தார் சாலைக்கு எடுத்த தாகத்தை போல்
என் கண்ணீரை ரசித்தாய் , ஆனால்.
நீ உன் புன்னகையால் மறைத்த,
கண்ணீர் துளியில் உன்
"ஈர இதயத்தை " கண்டேன் .
நேற்று என்னுடன் மெரினாவில் உலா வந்த நிலா
இன்று மயாமியில், என் உலகின் சந்திர கிரகணத்தை
மட்டும் நீயே நிச்சயிகிறாய்;
உன் படைப்பிற்கு பூங்கொத்து அளிக்க வந்த நான் ,
அளவான படைப்பிற்கு அளவில்லாத , உன் குருதி
உறைந்த போது, உன் சுற்றமான நல்லிதியங்களில் ,
குருதி கொப்பளித்ததை உணர்ந்தேன் .

கவிதை

அஸ்தமனத்தை தேடி கிழக்கே சென்ற நான் ,
மேற்கில் விடியலின் வெளிச்சமாய் , என்
நண்பனை கண்டேன். அவன் கண்களின்
ஒளி வெள்ளத்தில் காணாமல் போனது
என் அஸ்தமனத்தின் வேட்கை.
சுப்ரமனியயும் , வீரப்பனையும் , சிலை செய்த
உன் கரங்களை கழுவ , உன் வாசல் வரை
வந்தவள் "சுனாமியல்ல ", "கங்கை ".
கவிதை
"முகவரிகளே" முதுமையின் "முகவரி"
காதல் என்பது "ரசாயன மாற்றமல்ல " ரசனை மாற்றம் "
"கணக்கு " சரியில்லை "வழக்கு" தானே வரும்.