Tuesday, November 10, 2009
Monday, November 9, 2009
Friday, November 6, 2009
குதித்து விளையாடும் குருவிகள்,
முதல்நாள் மழை நீரில்,
குளித்து சிலிர்க்கும் காக்கைகள்,
வகுபிற்கிடை, தட்டியில் ஓட்டையிட்டு ,
மாற்றிக்கொள்ளும் பேனா, பென்சில்கள்,
கலர்கலராய் குச்சி ஐஸ் ,
பள்ளித் தோட்டத்து பச்சைமாங்காய்,
மழைகாலத்தில் சாலைக்கு இணையாக,
வகுப்பறையில் கணுக்கால் மழைநீர்,
கால்கள் மழைநீரை அளைய,
கண்கள் பேய் மழையை வேடிக்கைபார்க்க,
காதுகள் எதோகொஞ்சம் ப்பாடம்கேட்கும்,
மாலையில் மழைநீரில், பல்லவன் பேருந்து
உண்டாக்கும் அலைக்கு ஒதுங்கி,
மழைநீரில் கப்பல் விட்டபடி
வீட்டுக்கு பயணம்.
Thursday, November 5, 2009
என் கனவு எனக்குப் பிடிக்கும்,
கனவில் வரும் உன்னைப் பிடிக்கும்,
கனவில் நம் இல்லறம் பிடிக்கும்,
உன்னைத் துயில் எழுப்பித் தூங்கச் செய்யும், என்
என் கடமைகளும், உன் "கடமைகளும் ",
அங்குதான் முழுமை அடைகின்றன,
மாலையில் நீ கொண்டுவரும் பத்துமுழ
மல்லிகையும், காலைக்குள் பந்தாடப் பட்டுவிடும்.
கண்கள் நிறைய கனவுகள், கைகள் நிறைய
வளையல்கள், இதயத்தில் "ஒருவனாய்" சுமந்த உன்னை,
சிறிது இடம் மாற்றி, " இருவராய்" சுமக்க ஆசை.
நம் மகளுடன் சேர்த்து உனக்கும் " பசிஆற்றிட" வேண்டும்.
என் கனவு எனக்குப் பிடிக்கும்.
அமைதியற்ற மனதிற்கு, அமைதி வேண்டும்,
தூக்கமிழந்த கண்களுக்கு , தூக்கம் வேண்டும்,
இதயமிழந்த எனக்கு, இதயம் வேண்டும்.
இனி, நம்பிக்கை மீது நம்பிக்கையில்லை,
அமைதியான இதயத்திற்குத் தேவையான,
தூக்கத்தை நானே தேடிக் கொண்டேன்.
கடவுளே, உன்னிடம் ஒரு வரம்
"உண்மைக் காதலை மட்டும்
உலகில் இருந்து எடுத்துவிடு ".
உண்மையானவர்களும் சாதிக்கப் பிறந்தவர்கள்.
அவர்களும், உலகில் வாழட்டும்.
Tuesday, November 3, 2009
கவிதை
மேற்கில் விடியலின் வெளிச்சமாய் , என்
நண்பனை கண்டேன். அவன் கண்களின்
ஒளி வெள்ளத்தில் காணாமல் போனது
என் அஸ்தமனத்தின் வேட்கை.