என் கனவு எனக்குப் பிடிக்கும்,
கனவில் வரும் உன்னைப் பிடிக்கும்,
கனவில் நம் இல்லறம் பிடிக்கும்,
உன்னைத் துயில் எழுப்பித் தூங்கச் செய்யும், என்
என் கடமைகளும், உன் "கடமைகளும் ",
அங்குதான் முழுமை அடைகின்றன,
மாலையில் நீ கொண்டுவரும் பத்துமுழ
மல்லிகையும், காலைக்குள் பந்தாடப் பட்டுவிடும்.
கண்கள் நிறைய கனவுகள், கைகள் நிறைய
வளையல்கள், இதயத்தில் "ஒருவனாய்" சுமந்த உன்னை,
சிறிது இடம் மாற்றி, " இருவராய்" சுமக்க ஆசை.
நம் மகளுடன் சேர்த்து உனக்கும் " பசிஆற்றிட" வேண்டும்.
என் கனவு எனக்குப் பிடிக்கும்.
No comments:
Post a Comment